search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஆர்ப்பாட்டம்"

    • பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
    • 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட த்தலைவர்கள் வெங்கடேசன், சேதுராமன்,நகர தலைவர் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.அகோரம் கண்டன உரையாற்றினார். பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்க வலியுறுத்தி தேங்காயை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து லாரியில் 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
    • திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆள் கடத்தல், கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் மக்களுக்கு பாதுகாப்பு இன்மை அதிகரிப்பு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, போதைப்பொருட்கள் புழக்கத்தால் சமூக விரோதிகள் ஊடுருவல் அதிகரிப்பு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வு போன்றவற்றை கண்டித்தும், தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்திருக்கும் தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.வின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கமாண்டோ பாஸ்கர், சிற்றம் சீனிவாசன், இன்பநாதன், ஞானகுமார், கடம்பத்தூர் முதல் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஆர்.டி.இ. சந்திரசேகர், போளிவாக்கம் மணி 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதேபோல பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    • ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,

    காவேரிப்பட்டனம்,

    காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,நகர செயலாளர் விமல் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன் ,முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், பேரூர் கிளைச் செயலாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் மதனகோபால் நன்றி கூறினார்.

    • பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெபாள்ளாச்சி,

    பி.ஏ.பி.பாசன விவசாயிகள் வாழ்வாதா–ரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி–யும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மாவட்ட குழு சார்பில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் தனியார் மண்டபம் எதிரே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    விவசாயிகள் கூறும்போது பி.ஏ.பி.கால்வாய் ஒரங்களில் உள்ள மின் இணைப்புகளை அதிகாரிகள் வேகமாக துண்டித்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    பரம்பிக்குளம், ஆழியாறு பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு தி்டத்தை நிறைவேற்ற வேண்டும். பி.ஏபி.கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்றனர்

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    • கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை.
    • அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, அரசு பள்ளிக்கூடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனர்.

    • பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், துணை செயலாளர் வெங்க டேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றி னார்கள்.

    இதில், பா.ம.க. மாநில துணைத்தலைவர் தா.தேவராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவை தகவல், தொழில்நுட்ப துறையின் மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் மாநில மாவட்ட, நகர பா.ம.க. நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள், பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

    • பால் விலை உயர்வை கண்டித்து நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் காந்தி தலைமை தாங்கி னார்.ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு,மின்சார கண்டன உயர்வு,சொத்து வரி உயர்வு கண்டித்தும் விலை உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஹேமாவதி, ஆன்மீக பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் நாகப்பன், அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சஞ்ஜெய் லோகேஷ்,நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன், நகர பொது செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சுரேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்ட த்தில் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி‌.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பாபு, ஸ்டாலின், ஆள வந்தார், ராஜேஷ், கண்ணன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.

    • மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக வசிக்கின்றனர்.
    • உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 1வது வார்டில் வசிக்கும் அப்பகுதி மக்கள் எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமல் வசித்து வருவதாகவும் அப்பகுதியில் தெரு விளக்குகள் இது இவரை போட்டு தரவில்லை என புகார் எழுந்தது. இது தவிர சாலையோரம் உள்ள பகுதிகளில் பாம்புகள் , உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

    சமீபத்தில் அத்த தெருவில் வசித்த ஒரு சிறுவனுக்கு பாம்பு கடித்து மிகவும் உயிருக்கு போராடி காப்பாற்றினோம். எனவே இது சம்பந்தமாக சாலை வசதி தேவை எனக் கூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறி 1வது வார்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும், தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் இனியும் செய்து தர தாமதித்தால் விரைவில் திட்டக்குடி, விருத்தாச்சலம் மாநில சாலையில் மக்கள் ஒன்று திரண்டு நாங்கள்சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவிப்பின்படி இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைவரும், முதல்-அமை ச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி -மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதன்படி ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பா ளர்கள் கே.இ.பிரகாஷ், சேகர், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லபாளையம் சிவக்குமார், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன்,

    கோபி நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான என்.ஆர்.நாகராஜன், கோபி முன்னாள் நகர செயலாளர் மணிமாறன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், கோட்டைப்பகுதி செயலாளர் ராமச்சந்திரன்,

    பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வீ.சி.நடராஜன், கவுன்சிலர்கள் புனிதா சக்திவேல், புவனேஸ்வரி பாலசுந்தரம், ஜெகதீஷ், சுகந்தி, கீதாஞ்சலி செந்தில்குமார், சுபலட்சுமி, தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால்,

    பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வட்டச் செயலாளர் தங்கமணி, தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டதால் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிடவேண்டும் அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வலியுறுத்தி, காரைக்காலில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நேற்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காரைக்கால் பெரிய பள்ளி வாசல் முகப்பில் தொடங்கிய இந்த பேரணி க்கு, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணை ப்பாளர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரணி, காரைக்கால் திருநள்ளாறு சாலை, பாரதியார் சாலை, தோமாஸ் அருள் வீதி, காமராஜ் சாலை வழியாக சென்று, காரைக்கால் கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், திரு.பட்டினம், அம்பகரத்தூர், நிரவி, சேத்தூர், நல்லம்பல், திருநள்ளாறு, புதுத்துரை, நேரு நகர் பகுதி ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமு கர்கள், சமுதாய அமைப்பு களின் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்ட த்தில், சிறுபான்மை சமூ கங்கள் மற்றும் மதச்சார்பற்ற  அரசியல் கட்சிகளை யும், ஜனநாயக அமைப்பு களையும் அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வேண்டும். மாநில அரசின் உரிமை களையும், மாநில காவல் துறையின் அதிகாரங்க ளையும் முற்றிலும் பறிக்கக் கூடிய தேசிய புலனாய்வு முகமையை, ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிட வேண்டும். அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    • பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி மகளிர் அணி தலைவி புவனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார்.

    ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 3 நாட்களுக்கு மேலான அனைத்து விடுப்பு களையும் விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற நிர்பந்திப்பது. குறை வான கூலிக்கு வேலை வாங்கிவிட்டு ஒரே உத்தரவில் 8 முழு சுகாதார திட்ட ஒருங்கிணை ப்பாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பவானி கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் பணியாளர்கள் ஒருநாள் தற்செயல் விருப்பு எடுத்து தங்களின் கோரி க்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×